Monday, December 30, 2019

ஜோஷ் கல்ச்சுரல்ஸ் அனுபவங்கள்


வருஷத்தோட கடைசி நாள் . கல்லூரிக்கு  லீவு போட்டாச்சு ! சரி காலையில எழுதணும்னு தோணுச்சு. ரொம்ப நாளா எழுத யோசிச்சு வச்ச விஷயம்தான் . நேரம் இன்மையினால முடியல. எப்பவும் போல ஆங்கிலத்துல எழுத ஆரம்பிச்சேன். அப்போதான் தோணிச்சு , தமிழ்ல எழுதி ரொம்ப நாள் ஆச்சு .எனக்கு ரொம்ப போர்  அடிச்சா சில நேரங்கள்ல என் பிளாக்க  நானே படிப்பேன். அப்டி படிக்கும்போது எனக்கு என் ஆங்கில வலைப்பூவை விட தமிழ் வலைப்பூ தான் பிடிக்கும். ஆனா தமிழ்ல எழுத யோசிக்குறோமேன்னு கில்டியா இருந்துச்சு . சரி தலைப்புக்கு வருவோம் . சில நாள் முன்ன எங்க கல்லூரில ஜோஷ்  அப்டினு ஒரு கலை விழா நடந்துச்சு . அது ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்கிற  விழா . பல போட்டிகள் நடக்கும் .வருடா  வருடம் நடக்கும் . பாட்டு  போட்டி, சமையல், மெஹந்தி , பெயின்டிங் , கவிதை, பேச்சு  போட்டி, ராம்ப்  வாக் அப்டினு நெறய போட்டிகள் இருக்கும் . இந்த மாதிரி எந்த நான் - டெக்கினிக்கல்   விஷயங்கள்லயும் நான் கலந்துக்கறது  இல்ல. அது ஏன் அப்டினு எனக்கே தெரியல . இந்த வருஷம், என் கூட வேலை செய்ற தோழி ஹெலன் , (என் பிளாட் நண்பரும் கூட )அவங்க சொல்லி நான் ரெண்டு போட்டில பேர் குடுத்தேன் . கவிதை மற்றும் பாடல் போட்டி. வெற்றி  பெறலனாலும் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு . அந்த  அனுபவத்தை பத்தினதுதான் இந்த பதிவு !

ரெண்டு போட்டிக்கும் கூகுள் பாம்ல பில் பண்ணிட்டேன்னே  ஒழிய போட்டில கலந்துக்கணும் அப்டிங்குற எண்ணம் பெருசா இல்ல. அன்னிக்கு என்ன தோணுதோ பாத்துக்கலாம்னு இருந்தேன் . முதல கவிதை போட்டிதான் நடந்துச்சு . அரை மணி நேரம் குடுத்தாங்க . தலைப்பை போட்டி ஆரம்பிக்கும் முன்ன தான் குடுத்தாங்க . டான் டு டஸ்க் ( காலை முதல் மாலை வரை ). ஆங்கில கவிதை போட்டிக்கும் தமிழுக்கும் ஒரே தலைப்பு. கவிதை அப்டினாலே எனக்கு உலகத்தின் இரு மாபெரும் கவிதைகள் நினைவுக்கு வரும் .

"ஒரு சுவீட் ஸ்டாலு பணியாரம் சாப்பிடுகிறது . ஆச்சரியக்குறி :) " அப்பறோம் "மரத்திலிருக்குது காய் , மரத்திலிருக்குது காய்...." . இது உங்களுக்கு புரியலைனா மன்னிக்கவும் . நீங்க ஆதித்யா டி.வி பாக்கறது இல்லனு நினைக்குறேன் . இந்த கவிதை மாதிரி நாமளும்  எழுதிரப்போறோம்னு  ஒரே பயம். போட்டி அன்னிக்கு காலையில் "விடியல் " அப்டிங்குற தலைப்புல ஒரு  கவிதை எழுதி பிராக்டீஸ் பண்ணேன்.  அந்த வர்க் அவுட் ரொம்ப உதவியா இருந்துச்சு 

போட்டி ஆரம்புச்சு பெருசா ஏதும் தோணல . அப்புறம் எப்டியோ எழுதிட்டேன் . அந்த கவிதை கீழே .

கலையும் கனவுகளின் தொடக்கமாய் 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் !

சலிப்புடன் சில நாள் ...
சிலிர்ப்புடன்  சில நாள் ...
அலுப்புடன் சில நாள்..
இதயக் களிப்புடன் சில நாள்... 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் ...

அமைதி நிலவும்  அதிகாலையிலே  ...
மனமது தேடும் எதையோ !
எனையே  முதலாய் என்றெனை  அழைக்கும் கொட்டைவடிநீர் !
சிற்றுண்டி  முதல் சமைத்து மதிய உணவு பிறகு முடித்து முடிகிறது என் முதல் பரிமாணம்!

கல்லூரி பேருந்து ஏறும் அக்கணம் எடுக்கும் மறு  பரிமாணம் !
கல்விதனை கற்பித்து ஆய்வுகள் சில செய்து
கழிகிறது என் பிற மணித்துளிகள் ...
வீடடையும்  போதினிலே மாறுகிறதே பரிமாணமதுவும் !

பூங்காவில் குழந்தையுடன்  குழந்தையாய்  மனமெடுக்கும் மறு  பரிமாணம் !
விட்டு வைத்த  வீட்டு வேலைகள் வீட்டு பாடமென
கழிகிறது என் நாளின் கடை பொழுதுகள் ...
பரிமாணங்கள் பலவெனினும்  கோணங்கள்
புதிதெனினும் சிரிப்பொன்றை நான் உதிர்க்க
மகிழ்வதனை  மனமேற்க
முடிகிறதே என் நாளும்
விடை காண்கிறதே கலைந்திட்ட  என் காலைக்  கனாவும் !


கவிதையை படித்தமைக்கு நன்றி.

அடுத்த நாள் பாட்டு போட்டி . கலந்துக்க போறது இல்லனு முடிவு செஞ்சுட்டேன் . ஆடிட்டோரியம்ல எல்லார் முன்னாடி பாட பயமா இருந்துச்சு . இதுக்கு முன்னாடி மினி ஹால் எங்க துறை  கான்பெரன்ஸ்  கல்ச்சுரல்ஸ்ல  பாடி இருக்கேன். ஆனா இது ஒட்டு மொத்த எஸ். ஆர். எம். இன்ஜினியரிங் , மெடிக்கல், டென்டல், ஆர்ட்ஸ்  , லா அப்டினு  எல்லாருக்குமே சேத்து நடக்குற போட்டி, எப்டினு யோசிச்சு போட்டிக்கு போல . ஹெலன் கால் பண்ணிட்டே இருந்தாங்க . போட்டி ஆரம்பிக்க போகுது வாங்கனு சொன்னாங்க . நான் கேக்கல . அப்போ ரெண்டு சக ஆசிரியைகள் ஐடா மற்றும் சவுமியா  என் ரூமுக்கு வந்தாங்க .ஏன் போலன்னு கேட்டாங்க . பயமா இருக்குன்னு சொன்னேன் . பாடி காமிக்க சொன்னாங்க . பாடுனேன். என்ன வலு கட்டாயமா ஆடிட்டோரியம்ல கூட்டிட்டு போனாங்க . ஹெலனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன் .
அவங்களுக்கும்  சந்தோஷம் . ஓரளவுக்கு பாடிட்டேன் . வீட்டுல கிச்சன்ல பாடுவேன். செல்வா கேட்டா  அவருக்கு புடிச்ச  இளையராஜா பாட்டு பாடுவேன் . பிளாட்ல நடக்குற விழால சும்மா பாடுவேன் . ஆனா அவ்ளோ பெரிய அரங்கத்துல பாடுற அளவுக்கு சிங்கர் இல்ல அதுவும் மைக்ல பாடி பழக்கம் இல்ல . ஆனா அன்னிக்கு நண்பர்கள் கட்டாயப்படுத்தி பாடுனேன் . ஆனா ரொம்ப காண்பிடண்ட்டா   இருந்துச்சு . சூப்பரா பாடலை . ஆனா புடுச்சு இருந்துச்சு . நெறய பேர்  குட்ஜாப்னு சொன்னாங்க . சில நேரங்கள்ல நம்மள உற்சாகப்படுத்துற ஊக்குவிக்குற நண்பர்கள் இருப்பது முக்கியமா ஆகுது . அவங்க அப்போ இழுத்துட்டு போலனா எனக்கு இந்த அனுபவம் கெடச்சுருக்காது . ஹெலன் அவங்க ப்ரண்ட்ஸ்கிட்டலாம் வீடியோவை போட்டு காட்டுனாங்களாம்.



ஒண்ணு  மட்டும் தெரிஞ்சுகிட்டேன் . பாசிட்டிவான நண்பர்கள் , மனிதர்கள் எவ்ளோ பேர்  நம்மள சுத்தி இருக்காங்களோ அவ்ளோ நல்லது . இப்போல்லாம் நெகடிவான மனிதர்களை நெறய தவிர்க்குறேன் . யாரையும் உதாசீன படுத்துறது இல்ல . காயப்படுத்துறதும் இல்ல .அது நம்ம வேலையும் இல்ல . ஆனா பாசிட்டிவ் மனிதர்கள கண்டரியிற அறிவை நெறய வளத்துக்க  ட்ரை பண்ணிட்டு இருக்கேன் . (செல்வா மயிண்டு வாய்ஸ் :"கிழிச்ச! ஒனக்கு ஒண்ணும் தெரியாது ..:) ) அவரை பொறுத்தவரை  என்னால மனிதர்களை கணிக்க முடியாது எல்லாரும் என்ன ஈஸியா  ஏமாத்திடுவாங்க . ஓரளவுக்கு உண்மையினாலும் இப்போ நெறய மாறி இருக்கேன் . சரி பாப்போம் .

படித்தமைக்கு மிக்க நன்றி . தங்களுக்கும்  தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள் :)

சுபலலிதா

Saturday, September 14, 2019

குழந்தைகள் - பார்ட் 2


தமிழ் ல எழுதி ரொம்ப நாளாச்சு . இங்க்லீஷ்லயே  மொஸ்டலி  எழுதறதுக்கு காரணம் இந்த டைப்பிங் ல இருக்க கஷ்டம் தான் . நம்ம எண்ணங்களை  எழுத்தா  மாத்துறப்ப தட்டச்சு  செய்ற வேகம் ரொம்ப முக்கியம். இல்ல எண்ணங்களுக்கும் எழுத்துக்கும் ஒரு சிங்க்  இருக்காது .  அதும் தமிழ கூகுள்  ட்ரான்ஸிடெரேஷன்  மூலம் டைப் பண்றது கொடும. மொதல்ல  இதுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் . அப்பவும் ஹிந்தி  தான் ரெண்டாவது மொழியா லேப்  டாப்ல  இருக்கணும்னு சொல்வாங்க . அட போங்கப்பா . இன்னிக்கி ஒரு  ப்ராஜெக்ட் ப்ரோபோசல் டைப் பண்ணனும்   ஆனா  எனக்கென்னமோ  எழுதுனா  பரவால்லன்னு தோணுச்சு .

ரொம்ப நாளா  இந்த குழந்தைங்க பத்தி எழுதணும்னு தோணுச்சு . முன்னாடி கூட எழுதி இருக்கேன் . காலேஜ்ல மொஸ்டலி  ஸ்டூடென்ஸ்  கூட  பேசுறேன்   வீட்டுக்கு வந்தா  என்னோட பொண்ணும்  அவளோட நண்பர்கள் கிட்ட  பேசுறேன் . அதனால அவங்க என்ன நம்ம பத்தி என்ன  நெனைக்குறாங்கனு  எழுதலாம்னு நெனச்சேன் .

குழந்தைங்க உங்க கிட்ட எப்படி பேசுறாங்களோ அத வச்ச நாம எப்படினு  புரிஞ்சிக்கலாம் .  ரொம்ப ஜாலியா பேசுனா நீங்க ரொம்ப ஜாலியான பெர்சன் இல்ல கிட்ட வரவே யோசிச்சாங்கன்னா  நீங்க டெர்ரர் பீஸுனு அர்த்தம். இந்த ஆராய்ச்சில நான் தெருஞ்சுக்கிட்டது நா ரொம்ப காமடி பீசுன்னு .

முதல்ல  நான் வீட்ல இருந்து ஆரம்பிக்குறேன் . கொஞ்ச நாள் முன்னாடி என்னோட  மாமியார் வீட்டுக்கு சம்மர் வகேஷுன்னுக்கு என் பொண்ணையும்  செல்வாவின்   தங்கை பொண்ணுங்களையும் கூட்டிட்டு  போனேன் . செல்வாவும் சரி அவர் தங்கையும் சரி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் . நான் அப்டி இல்ல . இருந்தாத்தான்   ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே. அதும் என்  பொண்ணு இருக்கே . நான் கோவமா இருந்தா கூட காமெடி பண்ணாதமான்னு சொல்லும் .. வகேஷுன் விஷயத்துக்கு  வருவோம் . போன ரொம்ப யூஸ் பண்ணகூடாதுன்னு  செல்வாவும்  அவர் தங்கையும் சொல்வாங்க . ஆனா அவங்க அப்போ எங்க கூட ஊருக்கு வரல  . நான் மட்டும் தான் இருந்தேன் . என்ன ஏமாத்தி எப்பவும் போன் ல கேம் வெளயாடுவாங்க . எனக்கென்னமோ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட்  பண்றதுல நம்பிக்கை இல்ல . என் போன  என் பொன்னும்   யூஸ் பண்ணுவா . டீ.வி ல கன்னெக்ட்  பண்ணி நெறய டிராயிங்  வரைவா . தேவையில்லாத விஷயங்கள் வந்தா கிளோஸ் பண்ணனும்னு சொல்லி இருக்கேன் . அவளும் அப்டி பண்ராளானு மானிடர் பண்ணி இருக்கேன் . கரெக்டா தான் இருக்கா . அதே மாதிரி தான் வேலூர்லயும்  சம்மர் வெகேஷன்ல நடந்துச்சு . ஒரு வாரம் கழிச்சு செல்வாவோட தங்கை  வேலூருக்கு வந்தாங்க . இந்த மூணு பசங்களும் வால  சுருட்டிட்டு பயங்கரமா மாஞ்சு மாஞ்சு பெயின்டிங்  பண்ணாங்க . அத கூட  நான் தாங்கிக்குவேன் . செல்வாவின் தங்கையின் முதல் பொண்ணு என்கிட்டே கேட்டுச்சு , "அத்தை நான் அன்னை தெரசா வரையட்டும்மான்னு "  . நான் சொன்னேன் , "என்ன நீ ரொம்ப கடுப்பேத்தற  இவ்ளோ நாள் இந்த பெயின்டிங் தெறமை எங்க போச்சு ?"  நான் எவ்ளோ சொல்லியும் வரையாதவங்க கிட்டத்தட்ட மூனு மணி நேரம் போன் யூஸ் பண்ணாம  வரைஞ்சாங்க . நல்ல விஷயந்தான் . நமக்கு தான் லைட்டா  கண்ணு வேர்த்துச்சு

இந்த சம்பவத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அதான் அவங்க அம்மா இல்லாதப்ப என் பொண்ணும் அந்த பொண்ணுங்களும் பயங்கரமா சண்டை போட்டுச்சுங்க . நான் பக்கத்திலதான்  இருந்தேன். குழந்தைங்க சண்டைல நாம தலையிட கூடாது . அவங்களே பேசி சமாதானம் ஆயிடுவாங்க . சரின்னு நான் வேடிக்கை பாத்தேன் . என் சிஸ்டர்  இன்  லா பொண்ணு என் பொண்ணு கிட்ட  சொல்லுது , "இரு மாமா (செல்வா) வரட்டும் ஒண்ண பத்தி கம்பளைண்ட் பண்றேன் " அதுக்கு என் பொண்ணு , " இரு அத்தை (சிஸ்டர் இன்  லா) வரட்டும் ஒங்கள பத்தி சொல்றேன் அப்டின்னுச்சு . நான் சொன்னேன் ,"நான் ஒருத்தி இங்க பெரிய மனுஷி இருக்கிறத மறந்துடீங்களானு  கேட்டேன் " அதுக்கு அதுங்க பயங்கரமா சிரிச்சுட்டு "சாரி அத்தை ஒங்கள மறந்துட்டோம்னு சொல்லுச்சுங்க ". இட்ஸ் ஆல் இந்த கேம் .

இது பத்தாதுன்னு எங்க பிளாட்ல  வேற சிமிளர் சம்பவம் நடந்துச்சு .  எப்பவுமே சுதந்திர தினத்தன்னைக்கு எங்க பிளாட்ல கொடி  ஏத்தி கொண்டாடுவோம் . போன சுதந்திர தினத்தப்ப சில குழந்தைகளை வச்சு நான் ஒரு சின்ன நாடகம் சொல்லி குடுத்தேன் . வெளி நாட் டு பொருட்களை வாங்கக்கூடாது அப்டிங்கிறதுதான் தீம் . இந்த தடவ எனக்கு நெறய வேலைகள் இருந்ததால ஏதும் பண்ண முடியல . என் பொண்ணுக்கு அன்னிக்கு ஸ்போர்ட்ஸ்  டே . அதனால என்னால கலந்துக்கமுடியாதுன்னு தோணிச்சு . அன்னிக்கு முன்னாடி நாள்  காலேஜுல இருந்து என் வீட்டுக்கு போயிட்டுருந்தேன் . அப்போ போன வருஷம் நான் டிராமாக்கு ட்ரெயின்  பண்ண பசங்க ஓடி  வந்து, "ஏன்  ஆன்டி இந்த வாட் டி ஏதும் நாடகம் இல்லையானு கேட்டாங்க . நான் சொன்னேன் . இல்லபா  வேணும்னா  இப்ப எதாச்சும்  ரெடி பண்லாமானு  கேட்டேன் ". அதுக்கு அவனுங்க  "அய்யய்யயோ வேணவே வேணாம்   ஆன்டி னு  சொல்லிட்டு ஓடிட்டானுங்க ". நான் பாட்டுக்கு போயிட்ருந்தேன் . அவனுங்க   கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தானுங்க . திடீர்னு அந்த விளையாட்ட விட்டு என்ன டேமேஜ்  பண்றதுல என்ன சந்தோசம் ? தெரியல .

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் . குழந்தைங்களுக்கு நம்மளோட மனச ஈஸியா கணிக்குற சக்தி உண்டு . சோ நெஸ்ட் டைம்  நீங்க எப்படி பட்டவங்கன்னு ஒரு குழந்தைக்கிட்ட பேசி தெரிஞ்சுக்கோங்க. டேமேஜ் பண்ணா நான் பொறுப்பில்லை ஆனா நீங்க அத கண்டிப்பா பெருமையா நெனச்சுக்கலாம் .

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா

Friday, July 19, 2019

விடை காணவே!

திடீர்னு அசெண்டிங்   வர்ட் ஆடர்ல ஒரு கவிதை எழுதணும்னு தோணுச்சு (கவிதைனு சொல்ல முடியாது ) . முதல் வரில  ஒரு வார்த்தை ரெண்டாவது வரில ரெண்டு வார்த்தை அப்டி !

படிச்சு பாருங்க

in search க்கான பட முடிவு




வானம் (1 )

பூமி கடல் (2 )

வியப்பை  ஊட்டும் என்றென்றும்! (3 )

மனம் அது விரிய விழைகிறேன்  (4)

இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)

தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் !   விடை தெரிந்தும்! (6)

எண்ணமது  விரிய காண்கிறேன் முயலும் பொழுது  சிற்சில  இன்பமும்! (7)

இன்பங்கள் பல கோடி  சில மட்டும்  நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)

அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)

பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன்  செல்கிறேன்  விடை காணவே! (10)


படித்தமைக்கு நன்றி!

சுபலலிதா


Friday, May 24, 2019

சில சில்லி அனுபவங்கள்


 



ரொம்பவே மனசு குழப்பமா இருக்கும்போது ரெண்டு விஷயம் பண்ணனும். ஒண்ணு  நல்ல காமடி பாக்கணும் . இல்ல எழுதனும் .  இன்னிக்கி செகண்ட் ஆப்ஷன்  சூஸ் பண்ணி இருக்கேன்   . சில நேரங்கள்ல எவ்ளோ நேர்மையா   கடுமையா உழைத்தாலும் அதற்கான பலன் நமக்கு அவ்ளோ ஈஸியா கெடைக்குறது இல்ல . பல நேரங்கள்ல வாய்ப்புகள  நாமே தவற விட்டுடறோம் .  எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை . வாய்ப்புகள தவறவிடறது  கூட நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்குதுன்னு  நினைக்குறேன் . வேற வழி நமக்கு இல்லையே. நம்மள மீறி நடக்குற விஷயங்களை யோசிச்சூ   மன அமைதிய இழக்கிறது  எனக்கு பிடிக்காது. இந்த பதிவும் என் மணக் குழப்பத்தை பத்தினது இல்ல .


நம்ம வாழ்க்கையில எத பண்றோமோ இல்லையோ சந்தோஷமா இருக்குற பாசிட்டிவ் ப்ரண்ட்ஸ் நெறய வச்சுக்கணும் . எனக்கு எங்க ப்லாட்ஸ்ல நெறய நண்பர்கள் உண்டு .   பெண்கள் சேர்ந்தாலே  காசிப்  தான் பேசுவாங்கன்னு இந்த உலகம் தப்பா நெனைக்குது . பெண்கள் எப்பவுமே  ஜாலியா இருக்கணும்னு நினைப்பாங்க. என்னோட நண்பர்கள் கிட்ட இருந்து நான் நெறய கத்து இருக்கேன்.  சேவிங்ஸ்  எவ்ளோ முக்கியம்னு  என்னோட தோழி சாவித்ரி ரொம்ப எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க . அதோட மட்டும் இல்லாமே அதுக்கு  ரெகுலரா உதவியும் செய்வாங்க. அதுல ஹெலன்  அப்டிங்குறவங்க   என்னோட வேலையும்  பாக்குறாங்க  . நாங்க ரெண்டும் பேரும்  பயங்கரமா யோசிப்போம் . பாதி வொர்க் அவுட் ஆகும். பாதி வொர்க் அவுட் ஆகாது. அவங்க பொண்ணும்  என் பொண்ணும்  வேற ப்ரண்ட்ஸ் . அதனால நெறய ஷாப்பிங் போவோம் . அப்பா ஒரு வாட்டி ஒரு கடையில என் பேரும்  போன் நம்பரும் எழுத சொன்னாங்க . கார்டு மூலம் பே  பண்ணதால இத சொன்னாங்க . அன்னிக்கு  காலையில நான் எக்ஸாம்  டூட்டி  பாத்து இருந்தேன். எல்லா ஸ்டுடண்ட்ஸ்  பேப்பர்லயும் என் பெறும்  கையெழுத்தும்  போட்டேன். அதே ஞாபகத்துல  அந்த கடையிலயும்  என் பேரும்  கையெழுத்தும் போட்டுட்டுட்டேன் . உடனே ஹெலன் சொன்னாங்க, "அப்டியே  வெறி குட்  கீப் இட் அப் " அப்டினும்  எழுதுங்க அப்டினாங்க . அந்த கடைக்காரங்க  வேற பயங்கரமா சிரிச்சாங்க . எங்க ப்லாட்ஸ் நண்பர்கள் இப்படித்தான் . பெண்கள் பொறாமை குணம்  உள்ளவங்கன்னு  சொல்வாங்க. ஆனா அப்டி இல்ல . எங்க பிளாட்ல  நெறய பேரு  வேலைக்கு போகல . ஆனா  வேலைக்கு போற பெண்களுக்கு அவங்க எப்படி உதவலாம்னு யோசிப்பாங்க .

ஹெலனுக்கு என்கிட்டே பிடிக்காத விஷயம் நான் நெறய சாரி  தேங்க்யூ  சொல்லுவேன் . அதனால என்ன ரொம்ப ஓட்டுவாங்க , ஆனாலும் என்னால அத மாத்திக்க முடியல . யாரவது சின்ன ஹெல்ப் பண்ணாலும்  எனக்கு தேங்க்ஸ் சொல்லணும் அதே மாதிரி சின்ன தப்பு பண்ணாலும் சாரி கேக்கணும் அது சின்ன பசங்களா இருந்தாலும் சரி .  இல்ல என் தல வெடிச்சுடும்.

நானும் ஹெலனும் ஒன்னாதான் காலேஜ்  போவோம் . ஒரு வாட்டி  காலேஜ் பஸ்  வரல . ஓலா  ஆட்டோ புக்  பண்ணோம்  . கேப் கிடைக்கல . அதனால தாம்பரம்  பஸ்  ஸ்டான்ட்  போய் அங்கிருந்து பஸ் புடுச்சுக்கலாம்னு இருந்தோம். கொஞ்சம் நேரம் ஆனதால  ஆட்டோவுலயே போகலாமான்னு  ஹெலன்  கேட்டாங்க . இதுவரைக்கும் ஆட்டோவுலயே அவ்ளோ தூரம் போனதில்ல . எனக்கென்னமோ பஸ்ஸே  வேகமா போகும் ம்னு தோணிச்சு . தாம்பரத்தில் இருந்து நெறய  அரசு பேருந்து  உண்டு. அதுலயும் எனக்கு குமரன் டிராவல்ஸ் ல  போக புடிக்கும். எஸ். ஏ  ராஜ்குமார் பாட்டெல்லாம் போட்டு செம்மயா  இருக்கும் .  எஸ். ஏ  ராஜ்குமார் பேன் லாம் இல்ல . இருந்தாலும் அது வித்தியாசமா இருக்கும். அதனால அந்த ஓலா ஆட்டோ ட்ரைவர் கிட்ட கேட்டேன் . "தம்பி  பஸ்  அளவுக்கு வேகமா போகாதுல்லப்பா ?".  அதுக்கு அந்த ட்ரைவர் , "அதெப்பிடிக்கா போகும் ?வேணும்னா   ஓனர்கிட்ட கேட்டு ஏதாது ஸ்பெஷல் இன்ஜின்   மாத்த  சொல்றேங்கா " அப்டினு  சொன்னார் .  ஏ ன் அப்படி  கேட்டேன் னு எனக்கே தெரியாது. பல நேரம் எதோ யோசனையில் இப்டி சில்லி கேள்விகளை கேப்பேன் . மோசட் லி  என்ன  சுத்தி இருக்கவங்க அத புரிஞ்சிப்பாங்க . அத கரெக்ட்டா ட்ரான்ஸ்லேட்டும் பண்ணுவாங்க . ஹெலனுக்கு ஒரே சிரிப்பு. அவங்க அதோட விட மாட்டாங்க . பிளாட்ல வந்து எல்லார்ட்டையும் சொல்லி  டேமேஜ்  பண்ணுவாங்க . சரி . வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் .

இன்னும் நெறய விஷயங்கள் இருக்கு . இப்போ ஞாபகம் இல்ல . இது ரெண்டு மட்டும் தான்  ஞாபகம் வந்துச்சு. வயசு ஆக ஆக  நெறய ஞாபகம் வச்சுக்க முடியல . நோ நோ . நம்ம மனசு எப்பவுமே யங்  தான் . அதுக்கு வயசு ஆகவே ஆகாது. ஆகக் கூடாதுன்னு நினைக்குறேன். பாப்போம். மணக் குழப்பமும் கொஞ்சம் கொறஞ்சது ..

படித்தமைக்கு நன்றி !
சுபலலிதா


Thursday, February 14, 2019

சந்தோஷம்!







இன்னிக்கு லீவு போட்டாச்சு . டெய்லி 4.3.0 க்கு எழுந்து சமைச்சு காலேஜூ போறது புடிக்குனாலும்
 ஒரு நாள் பிரேக்  சில நேரம் தேவைப்படுது. அன்னிக்கும்  நமக்கு வீட்ல மொளகா காயவைக்கறது , இட்லி மாவு அரைக்குறதுன்னு ஏதாவது  இருக்கும் பட்  காலை வேலைய  எனக்கு புடுச்சதா ஆக்கிக்கணும்னு  நெனச்சேன் . தட் இஸ்  வை  .   இந்த டயலாக்  வடிவேலு  சொல்லும்போது ரொம்ப சிறப்பா  இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த   நடிகர் அவர் தான். படத்துல என்னமோ அவர்தான் எனக்கு ஹீரோ வா  தெரிவாரு . ஹீரோ தான் எதோ சைடு ரோல்  காமெடியனா  தெரிவாரு .

எனக்கு தெருஞ்சு நம்மள சிரிக்க வைக்குறவங்க  தான் கடவுள். நான் என்னிக்கது வீட்ல ரொம்ப கோவப்  படுவேன் .   என் பொண்ணு ம் செல்வாவும் என்ன சிரிக்க வைப்பாங்க . ஆனா எப்பவுமே செல்வாதான் ஷாட் டெம்பெர்ட் . ஒரு நாளுக்கு நூறு வாட்டியது அவர் கிட்ட திட்டு வாங்குவேன் . எனக்கு என்னமோ அவர் கிட்ட திட்டு வாங்குனாதான் அன்னிக்கு திருப்தியா  இருக்கும் . நம்ம எது சொன்னாலும் திருந்த மாட்டேங்குறாளேன்னு அவருக்கு இன்னும் கோபம் வரும் . காலையில எழுந்து உடனே ஏதாது நான் சொதப்பி இருப்பேன் . அதுக்கு திட்டு விழும் . ஒரு வே ள அவர் திட்டலைனா  என்னமோ எனக்கு அவருக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லயோன்னு  ஒரே படப்பிடிப்பா  இருக்கும் . இதெல்லாம் யார் எனக்கு சொல்லி குடுத்தா. என்னோட ஹீரோ வடிவேலுதான் .எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் காமெடிய நெனச்சு பாருங்க . சிரிக்காதவங்க இருக்கு முடியாது.


இந்த மாதிரி நம்மள சந்தோஷமா வசிக்கிற விஷயங்கள் என்னென்ன அப்டினு யோசிச்சேன். அதான் இங்க பதிவு பண்ணிருக்கேன் .

எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் சந்தோஷம் . ஆனா அது எதுல இரு க்குனு தான் நம்மள்ல பாதி பேருக்கு தெரியறது இல்ல . எனக்கென்னமோ நமக்கு புடிச்ச விஷயத்தை பன்னாலே சந்தாஷம் கெடைக்கும்னு  தோணுது. அந்த லிஸ்ட் கீழே

1. என்னதான் சம்பாதிச்சாலும்  செல்வா பாக்கெட்ல இருந்து பணம் சுடுறது எனக்கு பிடிக்கும். அதுக்கு திட்டு வாங்குறது புடிக்கும் .

2. நானும் என் பொண்ணு ம்  சேர்ந்து பக்கத்து தெருல இருக்குற சூப்பர்  மார்க்கெட்டுக்கு போய்  அருண் ஐஸ்கிரீம்  செல்வாக்கு தெரியாம சாப்பிட பிடிக்கும் .

3. நானும் என் பொண்ணு ம் வெள்ளிகிழைமை இரவு யூடூப்பில எங்க ரெண்டு பேருக்கு பிடிச்ச சாங்ஸ் , சானெல்ஸ்  டிவி ல கன்னெக்ட் பண்ணி பாக்க புடிக்கும் .

4. நான் செய் றதுலயே  என்னக்கு பிடிச்சது மீன் குழம்பு தான் . பிரியாணி போர்  அடிச்சுருச்சு .

5.இருட்டா  இருக்குற அதிகாலைல  ஜன்னல் பாத்துட்டே சமைக்க புடிக்கும் .

6. காலேஜ் பஸ்ல போகும்போது  ஹெட்போன்ல எனக்கு புடிச்ச சாங்ஸ் கேக்க புடிக்கும்.


7. காலைல என்னோட காலேஜ் பஸ் காலேஜுக்குள்ள  போகும்போது புடிக்கும்.

8.  கிளாஸ் எடுக்க  புடிக்கும் .

9. ஸ்டுடண்ட்ஸ் கிட்ட ப்ராஜெக்ட் டிஸ்கஷன் எனக்கு ரொம்ப புடிக்கும்


10. நண்பர்களுடன் சேர்ந்து சாப்புட்ர  லன்ச்  ஹவர்  புடிக்கும். அதுல எப்பவுமே ஸ்போர்ட்டிவா  இருக்குற எங்க குரூப்லயே சீனியர் 50 வயது உள்ள விசா மாம் எனக்கு ரொம்ப புடிக்கும் .



11.. பழைய நண்பர்கள்  கிட்ட பேச புடிக்கும் . பிரவீனா , வாணி அனிதா , கவிதா மாம் அப்பறோம்  யு.எஸ். ல இருந்து எப்ப வந்தாலும் கால் பண்ற ஸ்ரீவி , வித்யா  காயத்ரி புடிக்கும் . என்னோட அண்ணா பல்கலைக்கழக  நண்பர்களுக்கு ஒரு குரூப் இருக்கு . அதுல மெசேஜ் பாத்தா புடிக்கும் . அவங்ககிட்ட பேசுனா ரொம்ப  லைட்டா  இருக்கும். ஆனா  டைம் தான் இப்போ கெடைக்குறது இல்ல .


12. என் அப்பார்ட்மெண்ட் நண்பர்களுடன்  அரட்டை அடிச்சு சிரிச்சு சிரிச்ச வர வயிறு வலி புடிக்கும் .


இப்படி எத்தனையோ சின்ன சின்ன விஷயங்கள் நெறய  புடிக்கும் .  நீங்களும் உங்களுக்கு என்ன புடிக்கும்னு யோசிச்சு  சந்தோஷமா இருங்க


படித்தமைக்கு நன்றி .


சுபலலிதா