Friday, July 19, 2019

விடை காணவே!

திடீர்னு அசெண்டிங்   வர்ட் ஆடர்ல ஒரு கவிதை எழுதணும்னு தோணுச்சு (கவிதைனு சொல்ல முடியாது ) . முதல் வரில  ஒரு வார்த்தை ரெண்டாவது வரில ரெண்டு வார்த்தை அப்டி !

படிச்சு பாருங்க

in search க்கான பட முடிவு




வானம் (1 )

பூமி கடல் (2 )

வியப்பை  ஊட்டும் என்றென்றும்! (3 )

மனம் அது விரிய விழைகிறேன்  (4)

இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)

தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் !   விடை தெரிந்தும்! (6)

எண்ணமது  விரிய காண்கிறேன் முயலும் பொழுது  சிற்சில  இன்பமும்! (7)

இன்பங்கள் பல கோடி  சில மட்டும்  நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)

அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)

பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன்  செல்கிறேன்  விடை காணவே! (10)


படித்தமைக்கு நன்றி!

சுபலலிதா