Friday, March 20, 2020

கவிதை முயற்சி



இது என்ன டிசைன்னு புரியல. இல்ல ட்ரஸ் டிசைன் இல்ல :) வாழ்க்கையோட டிசைனை  சொன்னேன் .  2015 வெள்ளம் வந்த சமயத்துல வீட்டுக்குள்ள இருந்தப்போ நெலம வேற. வெளிய போகமுடியாம இருந்துச்சு. இப்போ எல்லாம் முடியும் ஆனா போக பயமா இருக்கு . எனக்கென்னமோ கொரோனவால  பாதிக்கப்பட்டவங்கள விட  இந்த சூழ்நிலையை சரியா கையாளாதவங்க தான் அதிகமா இருப்போம்னு நினைக்குறேன். என்னையும் சேத்துதான் சொல்றேன். வீட்லயே எப்பவுமே இருக்கும் இல்லத்தரசிகள் , ரிட்டயர்ட் ஆன  முதியோர் இவங்களுக்கு பெருசா ஏதும் தோணாது ஏன்னா ஆல்ரெடி  அவங்க இத ஹாண்டில்  பண்ணிட்டாங்க . வெளிய நாலு பேரோட பேசி பழகுனவங்களுக்கு  நிச்சயமா கஷ்டமா இருக்கும் . எடுத்துக்காட்டுக்கு என்னைய  எடுத்துக்கிட்டா ஒரு நாளைக்கு கொறஞ்சது 50 பேர்ட்டயாது பேசுவேன் . 50  பேரும்  நெருக்கமானவங்க இல்லனாலும் தொழில் ரீதியா மாணவர்கள் ஆசிரியர்கள் கிட்ட பேசும்போது நம்ம கொஞ்சம் டைவர்ட்  ஆவோம் . வீட்டுக்கு வரும்போது மாறுபட்ட சூழ்நிலையை   பாக்ரதால கொஞ்சம் லைப்  வேற மாதிரி இருந்துச்சு . வீட்ல குடும்பத்தோட இருக்கிறது மகிழ்ச்சியான விஷயமானாலும் சில சமயங்கள்ல குழந்தைகளை  விளையாட விடாம இருக்கோமா . அவங்ககிட்ட இருந்து நமக்கு வர பிரஷர்ல நம்ம தடுமாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கு. நேத்து தான் நானும்  என் பொண்ணும்  டைம்  டேபிள் போட்டு ஆக்ட்டிவிட்டி  செய்யலாம்னு முடிவு  பண்ணோம் .செல்வா ஒர்க் பிரேம் ஹோம் . நானும் மாணவர்களுக்கு  வீடியோ மூலம் சொல்லித்தறணும் . ஆனா குழந்தைகளால அப்பா அம்மா ரெண்டு பேரும்  வீட்ல எப்பயும் வேல பாக்றதா ஏத்துக்க முடியல . என் பொண்ணு கூட இருக்கும்போது லேப்டாப் கைல வச்சுக்க மாட்டேன் . மொபைல் கூட அவ வேற வேலைல பிசியா இருந்தாதான்  என்ன யூஸ் பண்ண விடுவா . இல்லனா அவ பக்கத்தில எப்பவும் நான் இருக்கணும் . சொன்னா  புரிஞ்சிப்பா  . ஆனா சில நேரங்கள்ல மக்கர் பண்ணுவா .


இதெல்லாம் நான் சரி பண்ண நான் சரியா இருக்கணும்ல . எப்பவாச்சும் கோவம் வர எனக்கு நேத்து பழைய படி ரொம்ப கோவம் வந்துருச்சு . அப்பத்தான் யோசிச்சேன் . நாம இந்த சூழ்நிலையை சரியா  கையாளணும்னு .எனக்கு புடுச்ச விஷயத்தை நான் பண்ணாலே  சீக்கிரமா சரியாயிடுவேன் . நீங்களும் என்ன  பன்னலாம்னு யோசிங்க.  எனக்கு புடுச்ச  விஷயங்கள்ல ஒண்ணு  எழுதறது .  ரொம்ப நாளா பாட்டர்ன்  பேஸ்ட்  கவிதை எழுதணும்னு யோசிச்சேன் . கவிதைங்கறது பெரிய வார்த்தையா இருக்கும் . கொஞ்ச மாதங்கள் முன்ன இன்கிரீசிங் வார்ட்  ஆர்டார்ல எழுதினேன் . அதாவது முதல் வரில  ஒரு வார்த்தை . இரண்டாம் வரில ரெண்டு வார்த்தை அப்டி. 10 வரி வரைக்கும் ட்ரை பண்ணேன். 
https://subalalithaintamil.blogspot.com/2019/07/blog-post.html
அதே மாறி வேற  பேட்டன்ல  யோசிப்போம்னு தோணிச்சு . அதான் இந்த பதிவு .   சப்பாடா  !!!! ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லிட்டேன். இந்த கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்றது நாக்கு  தள்ளுது :)


அந்த பேட்டன் இது தான் .






இந்த பே ட்டேன்ல இந்த கவிதையை பிட்  பண்ண ட்ரை பண்ணேன் . முடிஞ்சா படிங்க :) டைப் பண்ண ட்ரை பண்ணேன் முடியல . சோ எழுதி போட்டோ எடுத்தேன் . கையெழுத்து மற்றும்  எழுத்து பிழைகளை மன்னிக்கவும் :) போட்டோவை க்ளிக் பண்ணி படிங்க  :)






படித்தமைக்கு நன்றி :)

சுபலலிதா