Monday, October 28, 2013

ரயில் பயணங்களில்- part 1

 இந்த பதிவ கிட்டதட்டடைப் பண்ணி முடிக்கும்போது இந்த யாகூ தட்டச்சு சொதப்பிருச்சு. கூகுள் தட்டசுக்கு என்ன ஆச்சுன்னு தெறியல.  அதுல டைப் பண்ண முடியல. பாப்போம் இந்த வாட்டி சொதப்பாம முடிக்குரனானு. இப்படி இன்னைக்கு எழுதியே  தீரணும்னு ு நான் நெனைக்குறதுக்கு காரணம் இன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல பாத்த சம்பவம். 



காலைல தாம்பரம் ஸ்டேஷன்ல எட்டு முப்பது ட்ரைன எப்பவும் போல மிஸ் பண்ணிட்டேன் . அப்போ என்னாச்சு ஒரு அம்மா தன்னோட பத்து வயசு கொழந்தய முதல்ல ரயில்ல ஏத்திட்டு அவங்க ஏற முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. அதுக்குள்ள ரயில் வேகமா கெளம்பிருச்சு. கொழந்த அழ ஆரம்பிச்சுருச்சு. அந்த அம்மா அதிர்ச்சில அப்டியே நின்னுட்டாங்க. அப்போ அந்த ட்ரைன மிஸ் பண்ண ஒருத்தர் வேகமா ஓடி ட்ரைன்ல ஏறி அலேக்கா கொழந்தய தூக்கி பின்ன சூப்பரா ஜம்ப் பண்ணி கொழந்தய அவங்க அம்மாட்ட குடுத்தாரு. சூப்பர்ல. வேகமா போற ரயில்ல ஏறக்கூடாதுன்னு மிஸ் பண்ண ஒருத்தர் ஒரு கொழந்தைக்காக ஏறி  அந்த ரயில மறுபடியும் மிஸ் பண்ணி......ச  சூப்பர்.  அந்த கொழந்த அழூம்போது எல்லாருமே ஒரு நிமிஷம்  ஸ்தம்பிச்சு நின்னப்ப டக்குனு களத்துல எறங்குற தைரியம்  அவர் ஒருத்தற்குத்தான் இருந்தது. இப்பிடி மனுஷங்களாலதான் மழ பெய்யுது போல. படிச்சதுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.