தமிழ் ல எழுதி
ரொம்ப நாளாச்சு . இங்க்லீஷ்லயே மொஸ்டலி எழுதறதுக்கு காரணம் இந்த டைப்பிங் ல இருக்க கஷ்டம்
தான் . நம்ம எண்ணங்களை எழுத்தா மாத்துறப்ப தட்டச்சு செய்ற வேகம் ரொம்ப முக்கியம். இல்ல எண்ணங்களுக்கும்
எழுத்துக்கும் ஒரு சிங்க் இருக்காது
. அதும் தமிழ கூகுள் ட்ரான்ஸிடெரேஷன் மூலம் டைப் பண்றது கொடும. மொதல்ல இதுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் . அப்பவும்
ஹிந்தி தான் ரெண்டாவது மொழியா லேப் டாப்ல இருக்கணும்னு
சொல்வாங்க . அட போங்கப்பா . இன்னிக்கி ஒரு
ப்ராஜெக்ட் ப்ரோபோசல் டைப் பண்ணனும்
ஆனா எனக்கென்னமோ எழுதுனா
பரவால்லன்னு தோணுச்சு .
ரொம்ப நாளா இந்த குழந்தைங்க பத்தி எழுதணும்னு தோணுச்சு . முன்னாடி
கூட எழுதி இருக்கேன் . காலேஜ்ல மொஸ்டலி ஸ்டூடென்ஸ் கூட பேசுறேன் வீட்டுக்கு வந்தா என்னோட பொண்ணும் அவளோட நண்பர்கள் கிட்ட பேசுறேன் . அதனால அவங்க என்ன நம்ம பத்தி என்ன நெனைக்குறாங்கனு எழுதலாம்னு நெனச்சேன் .
குழந்தைங்க
உங்க கிட்ட எப்படி பேசுறாங்களோ அத வச்ச நாம எப்படினு புரிஞ்சிக்கலாம் . ரொம்ப ஜாலியா பேசுனா நீங்க ரொம்ப ஜாலியான பெர்சன்
இல்ல கிட்ட வரவே யோசிச்சாங்கன்னா நீங்க டெர்ரர்
பீஸுனு அர்த்தம். இந்த ஆராய்ச்சில நான் தெருஞ்சுக்கிட்டது நா ரொம்ப காமடி பீசுன்னு
.
முதல்ல நான் வீட்ல இருந்து ஆரம்பிக்குறேன் . கொஞ்ச நாள்
முன்னாடி என்னோட மாமியார் வீட்டுக்கு சம்மர்
வகேஷுன்னுக்கு என் பொண்ணையும் செல்வாவின் தங்கை பொண்ணுங்களையும் கூட்டிட்டு போனேன் . செல்வாவும் சரி அவர் தங்கையும் சரி கொஞ்சம்
ஸ்ட்ரிக்ட் . நான் அப்டி இல்ல . இருந்தாத்தான்
ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே. அதும் என்
பொண்ணு இருக்கே . நான் கோவமா இருந்தா கூட காமெடி பண்ணாதமான்னு சொல்லும் .. வகேஷுன்
விஷயத்துக்கு வருவோம் . போன ரொம்ப யூஸ் பண்ணகூடாதுன்னு செல்வாவும் அவர் தங்கையும் சொல்வாங்க . ஆனா அவங்க
அப்போ எங்க கூட ஊருக்கு வரல . நான் மட்டும்
தான் இருந்தேன் . என்ன ஏமாத்தி எப்பவும் போன் ல கேம் வெளயாடுவாங்க . எனக்கென்னமோ ரொம்ப
ரெஸ்ட்ரிக்ட் பண்றதுல நம்பிக்கை இல்ல . என்
போன என் பொன்னும் யூஸ் பண்ணுவா . டீ.வி ல கன்னெக்ட் பண்ணி நெறய டிராயிங் வரைவா . தேவையில்லாத விஷயங்கள் வந்தா கிளோஸ் பண்ணனும்னு
சொல்லி இருக்கேன் . அவளும் அப்டி பண்ராளானு மானிடர் பண்ணி இருக்கேன் . கரெக்டா தான்
இருக்கா . அதே மாதிரி தான் வேலூர்லயும் சம்மர்
வெகேஷன்ல நடந்துச்சு . ஒரு வாரம் கழிச்சு செல்வாவோட தங்கை வேலூருக்கு வந்தாங்க . இந்த மூணு பசங்களும் வால சுருட்டிட்டு பயங்கரமா மாஞ்சு மாஞ்சு பெயின்டிங் பண்ணாங்க . அத கூட நான் தாங்கிக்குவேன் . செல்வாவின் தங்கையின் முதல்
பொண்ணு என்கிட்டே கேட்டுச்சு , "அத்தை நான் அன்னை தெரசா வரையட்டும்மான்னு
" . நான் சொன்னேன் , "என்ன நீ ரொம்ப
கடுப்பேத்தற இவ்ளோ நாள் இந்த பெயின்டிங் தெறமை எங்க போச்சு ?" நான் எவ்ளோ சொல்லியும்
வரையாதவங்க கிட்டத்தட்ட மூனு மணி நேரம் போன் யூஸ் பண்ணாம வரைஞ்சாங்க . நல்ல விஷயந்தான் . நமக்கு தான் லைட்டா கண்ணு வேர்த்துச்சு
இந்த சம்பவத்துக்கு
கொஞ்ச நாள் முன்னாடி அதான் அவங்க அம்மா இல்லாதப்ப என் பொண்ணும் அந்த பொண்ணுங்களும்
பயங்கரமா சண்டை போட்டுச்சுங்க . நான் பக்கத்திலதான் இருந்தேன். குழந்தைங்க சண்டைல நாம தலையிட கூடாது
. அவங்களே பேசி சமாதானம் ஆயிடுவாங்க . சரின்னு நான் வேடிக்கை பாத்தேன் . என் சிஸ்டர் இன் லா
பொண்ணு என் பொண்ணு கிட்ட சொல்லுது ,
"இரு மாமா (செல்வா) வரட்டும் ஒண்ண பத்தி கம்பளைண்ட் பண்றேன் " அதுக்கு என்
பொண்ணு , " இரு அத்தை (சிஸ்டர் இன் லா)
வரட்டும் ஒங்கள பத்தி சொல்றேன் அப்டின்னுச்சு . நான் சொன்னேன் ,"நான் ஒருத்தி
இங்க பெரிய மனுஷி இருக்கிறத மறந்துடீங்களானு
கேட்டேன் " அதுக்கு அதுங்க பயங்கரமா சிரிச்சுட்டு "சாரி அத்தை ஒங்கள
மறந்துட்டோம்னு சொல்லுச்சுங்க ". இட்ஸ் ஆல் இந்த கேம் .
இது பத்தாதுன்னு
எங்க பிளாட்ல வேற சிமிளர் சம்பவம் நடந்துச்சு
. எப்பவுமே சுதந்திர தினத்தன்னைக்கு எங்க பிளாட்ல
கொடி ஏத்தி கொண்டாடுவோம் . போன சுதந்திர தினத்தப்ப
சில குழந்தைகளை வச்சு நான் ஒரு சின்ன நாடகம் சொல்லி குடுத்தேன் . வெளி நாட் டு பொருட்களை
வாங்கக்கூடாது அப்டிங்கிறதுதான் தீம் . இந்த தடவ எனக்கு நெறய வேலைகள் இருந்ததால ஏதும்
பண்ண முடியல . என் பொண்ணுக்கு அன்னிக்கு ஸ்போர்ட்ஸ் டே . அதனால என்னால கலந்துக்கமுடியாதுன்னு தோணிச்சு
. அன்னிக்கு முன்னாடி நாள் காலேஜுல இருந்து
என் வீட்டுக்கு போயிட்டுருந்தேன் . அப்போ போன வருஷம் நான் டிராமாக்கு ட்ரெயின் பண்ண பசங்க ஓடி வந்து, "ஏன் ஆன்டி இந்த வாட் டி ஏதும் நாடகம் இல்லையானு கேட்டாங்க
. நான் சொன்னேன் . இல்லபா வேணும்னா இப்ப எதாச்சும் ரெடி பண்லாமானு கேட்டேன் ". அதுக்கு அவனுங்க "அய்யய்யயோ வேணவே வேணாம் ஆன்டி னு
சொல்லிட்டு ஓடிட்டானுங்க ". நான் பாட்டுக்கு போயிட்ருந்தேன் . அவனுங்க கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தானுங்க . திடீர்னு
அந்த விளையாட்ட விட்டு என்ன டேமேஜ் பண்றதுல
என்ன சந்தோசம் ? தெரியல .
ஆனா ஒன்னு மட்டும்
நிச்சயம் . குழந்தைங்களுக்கு நம்மளோட மனச ஈஸியா கணிக்குற சக்தி உண்டு . சோ நெஸ்ட் டைம் நீங்க எப்படி பட்டவங்கன்னு ஒரு குழந்தைக்கிட்ட பேசி
தெரிஞ்சுக்கோங்க. டேமேஜ் பண்ணா நான் பொறுப்பில்லை ஆனா நீங்க அத கண்டிப்பா பெருமையா
நெனச்சுக்கலாம் .
படித்தமைக்கு
நன்றி
சுபலலிதா