Thursday, August 25, 2011

மூக்கு கண்ணாடி ஆசைகள் ....



நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பூவுல எழுதறேன் ...அதுக்கு எனக்கு நானே ஒரு குட் சொல்லிக்குறேன்...
அத முடிச்சிட்டு எழுதலாம், இத முடிச்சிட்டு எழுதலாம்னு கடைசில எதையும் முடிக்க முடியல . சரி எழுதவாவது செய்வோம்னு ஆரம்பிச்சாச்சு.இந்த மொக்கைய ஆல்ரெடி செல்வாகிட்ட போட்டாச்சு.. சரி மத்தவங்ககிட்டயும் பகிரலாமேன்னு இத ஆரம்பிக்கிறேன்...

சின்ன வயசுல அதென்னமோ அந்த மூக்கு கண்ணாடி மேல ஒரு விருப்பம். மூக்கு கண்ணாடி மாட்டி இருக்றவங்க எல்லாரும் அழகா இருக்காங்கனு ஒரு நெனப்பு. நம்மளால கண்ணாடி போட முடியலயேன்னு ஒரு வருத்தம் வேற . சரி நம்ம தான் கண்ணாடி போடல . நம்ம அப்பா அம்மா கூட போட மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் .

அப்போ ரெண்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்னு நெனைக்குறேன். அப்பா கண் டாக்டர பாக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு . அன்னிக்கெல்லாம் ஒரே குஷி . நம்ம அப்பாவும் கண்ணாடி போடப் போறாருன்னு ஒரு குதூகலம்.கண்ணாடி போட்ட அப்பாவ பாக்க தெருவிலயே காத்துகிட்டு இருந்தேன். பக்கத்துக்கு வீட்டு பிரண்ட்ஸ் கிட்ட ஒரே பெரும வேற. ஆனா அப்பா கண்ணாடி போடாம நடந்து வரத பாத்து பொசுக்குனு ஆயுடுச்சு. ஏம்பா கண்ணாடி போடலன்னு ஒரே அழுக. ஒரு நாள் ,ஒரு வழியா அப்பாவும் கண்ணாடி போட்டாரு.ஆனா அப்பா மத்த அப்பா மாதிரி எப்பவும் கண்ணாடி போடாம படிக்கும்போது மட்டும் போடறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.அவர் போடாத நேரத்துல அந்த கண்ணாடிய போட்டு பாத்து அந்த மன கஷ்டத்த சந்தோஷமா மாத்திக்குவேன்.

சின்ன வயசுல இருந்து நமக்கு எப்போ வயசாகும்,கண்ணாடி போடலாம்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்திட்டே இருக்கும் .இதலாம் ஏதோ சின்ன வயசுல நடந்துச்சு . சோ மன்னிசிரலாம்னு வச்சுகோங்க .
பி .இ. படிக்கும்போதுகூட நான் அடங்கல. கண்ணு வலிக்குது சரியா தூர இருக்கிறது தெரியல டாக்டர்ட கூட்டிட்டு போங்கன்னு ஒரே ராவடி.டாக்டரும் தூரத்தல இருக்ற எழுத்து தெரியுதான்னு டெஸ்ட் பண்ணாரு.அதுல பாசும் ஆயாச்சு.அப்றோம் ஏம்மா இங்க வந்தேன்னு டாக்டர் கேட்டாரு.இல்ல இத விட தூரத்துல இருக்கிறது தெரியலன்னு சொன்னேன். அதுக்கு டாக்டரு, ஒனக்கு மட்டும் இல்ல அது யாருக்குமே தெரியாது, போயிட்டுவாமான்னு சொல்லிட்டாரு.ஒரே ஏமாத்தமா போச்சு.அது அந்த டாக்டருக்கு புரிஞ்சுருக்கும் போல. 0.25 பவர்ல கண்ணாடி வேணா போட்டுக்கோன்னு சொல்லிட்டாரு.நானும் கொஞ்ச நாள் போட்டுக்கிட்டு திரிஞ்சேன் .சீ இந்த பழம் புளிக்கும்னு அப்றோம் போடறது இல்ல .

அப்றோம் வேற என்ன? மொக்க முடிஞ்சது. அடுத்த மொக்கைப் பதிவில் சந்திப்போம்.. படிச்சதுக்கு மிக்க நன்றி :)