Friday, December 14, 2018

பரீட்சை அட்ராஸிடீஸ்




டைட்டில பாத்தா எங்கயோ கேள்வி பட்டா மாதிரி இருக்குல்ல. எஸ் நக்கலைட்ஸ்  யு  டியூப்  சேனல்  பாக்றவங்க கேள்வி பட்டுருப்பீங்க .  சேனல் ப்ரோமோஷன் லாம் இல்ல . அதுல நம்பிக்கையும் இல்ல . சரி விஷயத்துக்கு வருவோம். சமீப காலமா என் மனச ரொம்ப பாதிச்ச சம்பவத்தை பத்தி தான் இங்க சொல்லப்போறேன் .  இதயம் பலகீனமானவங்க, 18 வயதுக்கு கீழே உள்ளவங்க மற்றும் ப்ரெக்னன்ட்  லேடீஸ் இந்த பதிவை படிக்க வேணாம் . ! அந்த அளவுக்கு பயங்கரமான விஷயம் இல்ல!  ஒரு வேல என் மனசு அந்த அளவுக்கு பாதிக்க பட்டதால அப்டி எழுதிட்டேன் . சரி இப்பவாது விஷயத்துக்கு வருவோம் .

இந்த காலத்து பசங்க கிட்ட இருக்கிற பிளஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க . அவங்ககிட்ட இருக்குற மைனஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க. என்ன  டைப்பிங் மிஸ்டேக்குனு பாக்குறீங்களா இல்ல அவங்க ப்ளஸ்தான் அவங்க மைனஸும். கொஞ்சம் மந்தமா படிக்குறவங்க  கடுமையா உழைப்பாங்க . நம்ம நல்ல மார்க் எடுக்கணுமேன்னு ஒரு பயம் அவங்க கிட்ட இருக்கும். (எல்லாம் சொந்த அனுபவம் தான் :)) ஆனா இந்த புத்திசாலிங்களுக்கு ஒரு மெதப்பு . இதால  படிப்பு பத்தின ஸீரியஸ்னஸ் அவங்களுக்கு இல்ல .
பத்தாததுக்கு ஏகப்பட்ட டீவியேஷன்ஸ்  சுத்தி சுத்தி . டீ.வி , மொபைல்  அது இதுனு .  இதுல இவங்க படிக்குற பார் ஆப்பிள்  பி பார்  பால் கு 1 லட்சம் பீஸ் வேற . சரி ஓகே  படிச்சா போதும்.  என்னதான் கல்வி வியாபாரமா ஆயிட்டாலும் எனக்கு எப்பவுமே கல்வி மேல ஒரு நம்பிக்கை உண்டு. அதும் பெண் குழந்தைகளுக்கு குடுக்கப்படற கல்வி அவங்கள  கண்டிப்பா இந்த சமுதாயத்துல நல்ல மரியாதையான ஒரு வேலை  பாக்கவும் அவங்க குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும் உதவும் . இப்பதான் இந்த பதிவுக்கான மெயின் பாயிண்ட் ஞாபகம் வருது .

என் பொண்ணுக்கு பரீட்சை வருதுன்னா அதுக்கு ஒரு வாரம் முன்னாடில இருந்தே  எனக்கு மனசு பீதி அடைய ஆரம்பிக்கும் .  அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணின்னுடுவா என்ன .   இந்த விஷயத்துல என் அபார்ட்மெண்ட்   ப்ரண்ட்ஸ் எல்லார்க்கும்  சேம்  ப்ளட்டுதான் ! .

பரீட்சை அன்னிக்கு காலேஜ் பஸ்ல வந்தா அஞ்சு மணி ஆயிடும் னு  கேப்  புக் பண்ணி  நாலு மணிக்கு வருவேன். வந்த உடனே  சரி ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிட வச்சுட்டு படிக்க வெப்போம்னு நெனப்போம். அப்பத்தான் அவங்க அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதுன்னு சொல்லுவாங்க. உலக அம்மாக்களை ஏமாற்றும் ஒரே டைலாக் இது தான் . சரி என்ன வேணும் னு கேட்டா தோசை வேணும் சொல்லுவாங்க . பொதுவா அவங்க மத்த நாள்ல ஸ்நாக்ஸ் தான் சாப்பிடுவாங்க  ஆனா பரீட்சை னா  மட்டும் இப்படி ! சரி ஒரு தோசை சாப்புடுவாங்கனு  பாத்தா எனக்கு நெய் போட்டு வேணும்பாங்க . சரி ரெண்டு சாப்புடுவாங்கனு  நெனச்சா அப்பத்தான் உலக அம்மாக்களை ஏமாத்தும் செகண்ட் லைலாக் சொல்லுவாங்க . உன் சட் னி  சூப்பர்  இன்னொன்னு  வேணும் ! அடிப்பாவி இதே சட்னி  தான அன்னிக்கு குடுத்தேன் நல்லா இல்லேனு சொன்னியேனு  கேட்டா  சரி போ  நான் பசியை தாங்கிக்குறேன் அப்டிங்குற மூணாவது டைலாக் அடிப்பாங்க. போய்  தொலை னு மூணு தோசை குடுப்பேன் . சரி இப்பாவது படிக்கலாமா னு கேட்டா  எப்படி சாப்பிட்ட உடனே படிக்கிறது .கொஞ்சம் நேரம் டோரே மான்  பாக்குறேன் அப்பிடின்னு சொல்லுவாங்க . சரி அதுக்குள்ளே வீட்டுல இருக்குற ம த்த  வேலைய  முடிச்சுடுலாம்னு போனா மணி ஆறு ! 


இப்ப படிச்சு தான ஆகணும் . எப்பவும் அந்த பாடத்தை எந்த அளவுக்கு அவ புரிஞ்சுருக்கானு தெறிஞ்சுட்டு தான் அடுத்து  கேள்வி பதிலுக்கு போவேன் . இல்லனா ஒரு வாட்டி  அத சொல்லி குடுத்துட்டு  அப்பறோம் படிக்க வைப்பேன் . படிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு கேள்வி  எழுதி குடுக்கணும் அவங்க பதில் எழுதுவாங்க . அது என்னமோ கேள்விதான் பெருசா இருக்கு பதில் சின்னதா இருக்கு. நம்ம கை வலிக்க கேள்வி எழுதறபாத்து அவங்களுக்கு ஒரே குஷி வேற. செம்ம கடுப்புல இருக்கும் போது  சொல்லுவாங்க .இன்னொரு வாட்டி  படிச்சுக்குறேனு. சரி னு சொல்லுவோம் . ரொம்ப நேரம் சும்மாவே படிக்குற மாதிரி இருக்கும் . நமக்கு செம்ம டென்சன் ஆகும் . அப்பத்தான் இவ்ளோ நேரம் சுவீட் மம்மி யா இருந்த நாம ஆங்கிரி மம்மியா மாறுவோம்அதே நேரத்தில  தான் அவங்க அப்பா என்ட்ரி கொடுப்பாரு . உடனே ஸீன்  சேஞ்சு  இவ்ளோ நேரம் நம்மல  நக்கல் பண்ணிட்டு இருந்தவங்க அழ ஆரம்பிப்பாங்க . படிக்கலைனா வுடு  அப்டினு அவங்கப்பா சொல்லுவார் . சரி படிக்க வேணாம். ஒனக்கு தெரிஞ்சதை எழுதுனு சொல்லுவேன் . அதையும் பண்ண மாட்டாங்க . மிஸ் திட்டுவாங்க  . நான் நல்ல  மார்க் எடுக்கணும் அப்டி இப்டினு ஏக போக டைலாக் அடிப்பாங்க . . காலேஜ்ல 70 பசங்களுக்கு சந்தோசமா பாடம்  எடுக்க முடிஞ்ச எனக்கு ஒரே ஒரு பொண்ண வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே. சப்பா  முடியலப்பா .
அப்பறோம் ஒரு நாள் மார்க் வரும் அதலாம் நல்ல மார்க் எடுப்பாங்க எப்பவுமே 25 கு 20 க்கு மேல எடுத்துடுவாங்க . அப்போ அவங்க அப்பா சொல்லுவார் சூப்பர் குட்டி நீ என் பொண்ணுடா குட்டி !

நாம அப்பவும் இதையெல்லாம் மனசுல ஏத்திகாம காது கேக்காத மாதிரி கிச்சன்ல தோசை சுட்டுகிட்டு  இருப்போம். எதோ நல்லா இருந்த சரி !நம்மளால முடிஞ்சது அவ்ளோதான் !


ஆனா நம்ம மனசோட ரியாக்ஷன்தான் இது ! 

உங்க டைம ரொம்ப வேஸ்ட்டு பண்ணிடனோ ?

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா



Friday, July 27, 2018

எஸ்.ஆர்.எம் அனுபவங்கள்




ஜூன் 29, 2015. நிஜமாலுமே  வாழ்க்கையில மறக்க முடியாத நாள். அன்னிக்குத்தான் நான் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்துல துணை பேராசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். ஜூன் 2014 லயே  பி.ஹெச் .டி. தீசிஸ்  முடுச்சிட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு போட்டு அலுத்து போயிருந்தப்ப   ஒரு நிறுவனத்துல வேலை கெடச்சுது. அந்த வேலை எனக்கு பிடிக்காததால  அந்த வேலைய மிகுந்த மன வருத்தத்தோட விட்டென் . விட்ட அன்னிக்கு ஈவினிங் தான் எஸ். ஆர். எம் இருந்து இன்டெர்வியூ  கால் வந்துச்சு. எனக்கு வந்த ஒரே காலும்  அது தான் .அதுவும் அன்னிக்கு வந்தது ஒரு பெரிய மேஜிக்  மாதிரி இன்னிக்கும் தோணும்.  ஜூன் 8  இன்டெர்வியூ. ஒரு பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை  காலை எஸ்.ஆர்.எம் இருந்து எனக்கு நீங்க செலக்டட்  னு கால் வந்துச்சு. அன்னிக்கு நானும் என் குடும்பத்தாரும் பட்ட சந்தோஷத்திற்கு அளவு இல்ல.  இந்த வாழ்க்கை என்னை எஸ். ஆர். எம் யே  இருக்க வைக்குதோ  இல்லையோ , எனக்கு எஸ். ஆர். எம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.

ஆசிரியர் ஆகணும்கிறது என் கனவு. அண்ணா பல்கலைக்கழத்துல வேலை செய்யும் பொழுது என்னோட பேராசிரியர்கள்  ரஞ்சனி மேம்  , கீதா மேம் எனக்கு பாடம் எடுத்திருக்காங்க.  நாம கூட பின்னால இந்த மாதிரி எடுக்கணும்னு அவங்க கிட்ட இருந்து சின்ன சின்ன நுணுக்கங்களை தெறிஞ்சு வச்சுப்பேன். இப்பவும் என்னோட பி.எச்.டி  ஸ்காலர்ஸ்க்கு மேம் என்ன எப்படி  கைடு பன்னாங்களோ  அதேயேதான் பாலோ பண்றேன் .அவங்கள மாதிரியே நானும் எனக்கான விதிமுறைகளை வச்சுருக்கேன் . இந்த பதிவுல என்னோட  ஆசிரியர்  அனுபவங்களை பதிவு செய்யறேன் .

அண்ணா பல்கலைக் கழகம் மாதிரியே தான் எஸ் ஆர் எம்மும் இருக்கும் அப்டினு ஜூன் 29, காலைல வேலைக்கு சேர போனேன் . உள்ள போகும்போதே ஒரு ய்யன் பயங்கரமா ஆரஞ்சு கலர்ல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு  பயங்கர ஸ்டைலா லைப்ரரிக்கு போயிட்டு இருந்தான் . எனக்கு  கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்புறம் முதல் க்ளாஸ் நாச்சுரல் லாங்குவேஜ்  ப்ராசஸிங்  பி.   மூன்றாம் ஆண்டுக்கு எடுத்தேன் . அது எலெக்ட்டிவ்  பாடம். 20 பேர் தான் அந்த பாடத்தை தேர்வு செய்து இருந்தாங்க. கொஞ்ச நாள் ஆக ஆக பயம் தெளிஞ்சு  போச்சு. பசங்க பாக்கத்தான் ரொம்ப ஸ்டைலா  இருக்காங்க ஆனா அவங்களும்  குழந்தைகள் தான் அப்டிங்குறத நான் உணர்ந்துக்கிட்டேன்.

எஸ். ஆர்.எம் பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா மாதிரி இருக்கும். அங்க வேலை பாக்குறேன் அபிடுங்குறதிக்காக இல்ல . நிஜமாலுமே ஜம்மு முதல் குமரி வரை மாணவர்கள் இருப்பாங்க. வெளிநாட்டு மாணவர்கள் வேற.  நான் பெருசா தமிழ்நாட்டை விட்டு போனதில்லை.  ஒரே முறை  யூ .கே  அப்பறோம் அண்ணா பல்கழகம் மூலமா ..டி  பாம்பே , கோரக்பூர் , ...தி ஐதராபாத் போயிருக்கேன். ஆனா இங்க வந்து அத்தன  ஊர்ல இருந்து வந்து படிக்குற மாணவர்களை பத்தியும்  அவங்க ஊர  பத்தியும் தெருஞ்சுகிட்டேன். ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. மொழி , கலாச்சார வேறுபாடுகள்  எதுக்குமே ஒரு தடையா இருக்க முடியாது.

நம்ம வேலைய ஒழுங்கா செஞ்சா  எல்லாரோட அன்பயும்  மரியாதையையும்  பெற முடுயும்னு இங்க வந்து தெரிஞ்சுகிட்டேன்.  எம்.   முடுச்ச உடனேயே 2006 சவீதா பொறியியல் கல்லூரில 9 மாதம் ஆசிரியரா வேலை செஞ்சேன். எனக்கு ரொம்ப புடுச்சு இருந்தது. பி.எச்.டி காக தான் அத விட்டுடு  அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தேன் . 2006 இருந்த மாணவர்களுக்கும் இப்போ 2018 இருக்குற மாணவர்களும் அசுர வித்தியாசத்தை உணர முடியுது . என்னோட சவீதா மாணவர்களை நான் கொறச்சு சொல்லல . சொல்லவும் முடியாது. அவங்க ரொம்ப அன்பானவங்க  திறமை சாலிங்க. அவங்கள பத்தி இந்த பதிவு பல வருடங்களுக்கு முன்னாடி எழுதி இருந்தேன்http://subalalitha.blogspot.com/2007/02/mini-achievement-mega-santhosham.htmlகிட்டத்தட்ட அங்க இருந்து அண்ணா பல்கலைக்கழகம்  வந்து  மூன்று வருடம் கழித்து எனக்கு திருமணம் ஆச்சு .இருந்தாலும் என்னோட மாணவர் சதீஷ் என் திருமணத்திற்கு வேலூர் வரை வந்தத என்னால இன்னுமும் மறக்க முடியாது. இன்னமும் அந்த மாணவர்கள் எனக்கு பிறந்தநாள் அன்னிக்கு வாழ்த்து  அனுப்புவாங்க . நான் சொல்ல வந்தது,  அப்போ மாணவர்களுக்கு  இருந்த  தொழில் நுட்ப   எக்ஸ்போஷர் வேற இப்போ உள்ள மாணவர்களுக்கு இருக்குற வசதிகள் வேற.
நான்  எஸ்.ஆர். எம்லவேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டு சி  ப்ரோக்ராம் சொல்லி குடுத்தேன் . அந்த வகுப்புல 70 மாணவர்கள். ஒரு 50 மாணவர்களுக்கு ஆல்ரெடி சி, சி++, ஜாவா தெறியும் . நான் ஆரம்பிக்குறதுக்குள்ள எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடுவாங்க.  ஆனா அந்த மிச்ச 20 மாணவர்களுக்கு நான் சொல்லி குடுத்தே ஆகணும். மனசுக்குள்ள அப்போ நெனச்சுப்பேன். "டேய் தம்பிகளா அக்கா சொல்லி  முடுச்சுறேன் டா  என்ன பேச உடுங்க டா" . இந்த பிரச்சனை  நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் பாடத்துக்கு இல்ல. நான் தான் அந்த பாடத்துக்கு முதல் ஆசிரியை . அதுவும் 20 மாணவர்கள் . அது புதிய தொழில்நுட்பம் அப்டிங்குறதால  மாணவர்கள் ஆர்வமா கவனிச்சாங்க. போன வருடம் அந்த பாடத்தை 240 பேர் தேர்வு செஞ்சு இருந்தாங்க . இது எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை குடுத்தது .  சி ப்ரோக்கிராம் விஷயத்துக்கு வரேன். நம்ம டீசிங் ஸ்டைலை மாத்தி பாத்தா என்னனு யோசிச்சேன் . பசங்களுக்கு தெரியாத விஷயம் எதாவுது ஒண்ண நாம தெரிஞ்சு அதாவூது ரியல் வேர்ல்ட் அப்ளிகேஷனோட பாடம் எடுத்தா பசங்க கவனிப்பாங்க. நேத்து என்கிட்டே சி ப்ரோக்ராம்மிங்  படிச்ச பையன் ( இப்போ மூன்றாவது ஆண்டு ) என் கிட்ட மெஷின் லேர்னிங் மற்றும் நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் ஒரு ப்ராஜெக்ட் செய்ய என்ன நியாபகம்  வச்சு வந்து இருந்தான் . ரொம்ப சந்தோஷமா இருந்தது

சமீப காலமா அதுவும் சுந்தர் பிச்சை அவர்கள்  இந்தியா  வந்து இருந்தப்ப மெஷின் லேர்னிங் முக்கியம்னு  மாணவர்கள் மத்தியில குடுத்த   பேட்டியில்  சொல்லியிருந்ததால  நிறைய மாணவர்கள் மெஷின் லேர்னிங் பாடத்தை தேர்வு செய்ய ஆரம்பிச்சாங்க. எனக்கு ஓரளவுக்கு அத பத்தி தெரியும் ஆனா  அத பத்தி அப்டேட்  செஞ்சே ஆகணும்னு தோணுச்சு . நானும் அந்த பாடத்தை எடுக்க  ஆரம்பிச்சேன் . இப்போ ரெண்டாவது முறை எடுக்குறேன் . இந்த சமயம் போன சமயத்தை விட இன்னும் ஆழமா மெஷின் லேர்னிங் பத்தி புரியற மாதிரி இருக்கு . முதல் நாள் மெஷின் லேர்னிங் வகுப்பு ஆரம்பிக்குறதுக்கு  முன்னாடி நாள் ஒரு மாணவன் என்கிட்டே வந்து சொன்னான், "நான் உங்கள தான்  மெஷின் லேர்னிங் படத்துக்கு தேர்வு செஞ்சிருக்கேன் . நான் ஆண்ட்ரு என்.ஜி. மெஷின் லேர்னிங் ஆன்லைன் கோர்ஸ்  முடிச்சிட்டேன் . தீப் லேர்னிங் கோர்ஸும் முடுச்சிட்டேன் . இன்னும் என்ன பண்ணனும் அப்டினு கேட்டான்  ". நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன் , "இதுவரைக்கும் நீ பண்ணதே  போதும் தம்பி ". இப்ப இருக்குற மாணவர்கள் முன்னாடி போய்  நிக்குறதுக்கே நம்மல  நெறய அப்டேட்  பண்ண வேண்டி இருக்கு . இல்ல  க்ளாஸ கண்ட்ரோல்ல வச்சிருக்க முடியாது . நமக்கு சாடிஸ்பாக்ஷனும் கிடைக்காது .


 இங்க எஸ். ஆர். எம் மாணவர்கள் அவங்க பாடத்துக்கு அவங்க ஆசிரியரை தேர்வு செய்ற  ஆப்ஷன் இருக்கு. நமக்கான மக்சிமம் லிமிட் முடுஞ்சதும் அடுத்த ஆசிரியரை தேர்வு செய்யலாம். நமக்கு  மாக்ஸிமம் லிமிட் பசங்க அலாட்  அகலினா   நம்மள நெறய பசங்க தேர்வு செய்யலன்னு  அர்த்தம் . அதுவும் செமெஸ்டர் முடிவுல மாணவர்கள் நமக்கு ரேட்டிங்   கொடுக்குறாங்க  . அதுவும் நம்மள இம்ப்ரூவ்  பண்ணிக்க வழி வகுக்குது .


இன்னும் இந்த துறைல ஒரு இருபது வருஷம் இருக்கணும்னா நெறய  அப்டேட்  பண்ணியே  ஆகணும்னு நினைக்குறேன் .  பாப்போம் வாழ்க்கை எப்பிடி நம்மள  கொண்டு போகப் போகுதுன்னு .

இந்த பதிவை படிக்க ஒரு பதினைந்து நிமிடமாது ஆயிருக்கும் ஒங்களுக்கு . பொறுமையா படித்ததுக்கு  நன்றி. மீண்டும் சிந்திப்போம் .

சுபலலிதா

Saturday, February 17, 2018

டிரைவிங் அனுபவங்கள்



போன செமெஸ்டர்  விடுமுறையப்போ  டிரைவிங் கத்துக்கணும்னு தோணுச்சு. என்னால எது பண்ண முடியும் எது பண்ண முடியாது அப்டிங்குறத செல்வா கணிச்சு வச்சிச்சுருப்பாரு. அது
மோஸ்டலி  கரெக்ட்டாதான் இருக்கும். சில சமயம் ஏதாது அவரு தப்பா  கணிச்சுருந்தா நான் அத சொல்லி கன்வின்ஸ் பண்ணுவேன்.  அப்டி அவரு என்னால முடியாதுன்னு  யோசிச்ச விஷயம்தான் டிரைவிங். அதுக்கு காரணம் இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல எங்கப்பா செல்வாவ எனக்கு வண்டி ஓட்ட சொல்லி குடுக்க சொன்னாரு . எனக்கு சுமாரா சைக்கிள் ஓட்ட தெறியும். ஆனா டூ  வீலர் ஓட்ட தெரியாது. செல்வாவும்  சொல்லிக்குடுத்தாரு. பிரேக் புடிக்க சொன்னா  பதட்டத்துல ஆக்சிலரேட்டர்  குடுத்துட்டேன்.  அன்னிக்கு  செல்வா, " இனிமே நீ டிரைவிங் ட்ரை  பண்ண வேண்டாம்னு" சொல்லிட்டாரு. சரி நானும் விட்டுட்டேன். சமீத்துல  என்னமோ தோணிச்சு. ஏன் ஓட்ட கத்துக்கக்கூடாதுன்னு .  சரி செல்வாக்கிட்ட சொன்னேன், அவரு  போர் வீலர் வேணா கத்துக்கோ  டூ  வீலர்  வேணாம்னு  சொல்லிட்டாரு . பின்ன ? நம்ம குடுத்த டெரர் அப்டில? :)

எங்க பிளாட்ல  ப்ரண்ட்ஸ்ட விசாரிச்சதுல க்ரீன் டிரைவிங் ஸ்கூல் தான் பெஸ்டுன்னு சொன்னாங்க. சரி செல்வாவும் எல்.எல்.ஆர் . போட்டு  முதல் க்ளாஸ்ல விடும்போது மிஸ்டர் பச்சை கிட்ட , (அவர் தான் சொல்லிக்குடுக்குறவரு)  , "கொஞ்சம் சட்டுனு புரிஞ்சிக்க மாட்டாங்க  பாத்து பத்திரமா சொல்லிகுடுங்கன்னு " சொல்லிட்டு போயிட்டாரு . கொஞ்சம் தூரம் ஓட்டுனுதுக்கப்றம் பச்சை சார்  சொன்னாரு. இவ்வளவு நல்லா ஓட்டுறீங்க
 மேடம் .ஒங்கள போயி உங்க வீட்டுகார்  அப்டி சொல்லிட்டாரே , அவர் முன்னாடி நாம ஒரு எட்டு போட்டு காட்டறோம்னு சொன்னாரு. நம்ம ஹிஸ்டரி  பச்சை சாருக்கு  தெரியாதுல்ல? . போக போக நம்ம "டக்கு"  எப்படினு புரிஞ்சுப்பாருனு விட்டுட்டேன்.

பச்சை சார் பத்தி சொல்லியே ஆகணும். அவர் நல்ல டீச்சர். ஆக்சுவலா  அவர் அரசு பேருந்து ஓட்டுநர் . பகுதி நேரமா செய்றார் . அவர்  பையனும்  பொண்ணும்  கூட டிரைவிங்  கத்து குடுப்பாங்க . ரொம்ப மோட்டிவேட் பண்ணுவாரு. பல தரப்பட்டவங்க  வருவாங்க. எல்லாருக்கும் அவங்களுக்கு ஏத்தா மாதிரி சொல்லி தருவார். அவர் அவரோட  ஸ்கூலுக்கு  அவர் பேர்  பச்சை அப்டிங்குறத    க்ரீன் டிரைவிங் ஸ்கூல்னு  வச்சிருந்தது எனக்கு ரொம்ப இனோவெட்டிவா  தோணிச்சு.   ஒரு நாள் ஒரு டர்னிங் வரும்போது நான் மிஸ் பண்ணிட்டேன். அங்க ஒரு சின்ன மலை இருக்கும்.  அவர் சொன்னாரு "மேடம் ஜஸ்டு மிஸ்.இந்நேரம்  நாம மலை ஏறிருப்போம் ". தட் ஆஸம் மொமண்ட்  அவருக்கு செல்வா என்ன பத்தி குடுத்த ஹிண்டு ஞாபகம்  வந்திருக்கணும். ஆனா டென்ஷன வெளியில காமிக்காம சிரிச்சிட்டே  சொல்லி தருவார்.

தினமும் வீட்டுக்கு வந்து நான் ஓட்டுனது பத்தி செல்வா கிட்டயும் என் பொண்ணு கிட்டயும் பேசுவேன். ஒரு நாள் செல்வா திடீர்னு கார ஸ்டாப் பண்ணிட்டு கொஞ்ச தூரம் நீ ஒட்டு அப்டினாரு. நானும் ஓட்ட ட்ரை பண்ணேன் . வண்டி ஸ்டார்ட் பண்ண முடியல  ஹாப்  க்ளட்ச்  புடிக்க வரல .  நம்ம வீட்டு ஆளுங்க சும்மா இருப்பாங்களா ? அதுவும் என் பொண்ணு இருக்கே  நம்மள டேமேஜ்  பண்றதுனா  முன்னாடி நிக்கும். என்னமோ அப்டி ஓட்டுன  அவ்ளோ தூரம்  ஓட்டுனனு  சொன்ன . ஸ்டார்ட் பண்ண கூட தெரியல அப்டினு கிண்டல் பண்ணாங்க.  நம்ம சமாளிப்போம்ல . இந்த கார்  வேற மாதிரி இருக்கு. நீங்க ரெண்டு  பேரும்  இருக்குறதுனால  எங்க  தப்பா ஒட்டி ஏதாது  ஆயிடுமோன்னு  டென்ஷனா  இருக்கு அப்டினு சாக்கு போக்கு  சொல்லி சமாளிச்சேன். அதுக்கப்புறமும் ஒரு நாள் ஓட்ட சொன்னாரு. கொஞ்சம் பதட்டப்பட்டேன். ஆனா ஒட்டிட்டேன்

லைசன்ஸ் எடுக்குற நாள் வந்த்துச்சு. ரொம்ப பயமா இருந்திச்சு.  ஆர். டி . ஓ ஆபிசர்  வர்ற சமயத்துல பச்சை  சார் பையன்  சொன்னாரு," மேடம் நான்  போய்  ஆபீசுல பணம் கட்டணும் . நீங்க சூர்யா ஸ்கூல் கார் எடுத்துக்கோங்க"  அப்டினு சொல்லிட்டாரு . அட பாவிங்களா . கடைசி நிமிசத்துல இப்டி கார மாத்துறீங்களேன்னு  நெனச்சேன் . அந்த கார் எனக்கென்னமோ சரியா வரல . ஒரு ரவுண்ட்  பிராக்டீஸ்  குடுத்தாரு அந்த ஸ்கூல் ட்ரைனர் . அந்த கார் ஹாண்ட்  பிரேக்  எனக்கு ரிலீஸ் பண்ண வரல. நான் ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது  ஆர்.டி. ஓ  ஆபிசர்  கார்ல ஏறிட்டாரு.  ஸ்டார்ட் பண்ணுங்கனு  சொன்னாரு . எனக்கு ஹாண்ட்  பிரேக்  ரிலீஸ் பண்ண வரல .   சரி இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாதுன்னு  அவர்கிட்டயே சொல்லிட்டேன் . அவர் ரிலீஸ் பண்ணி குடுத்தாரு.  ஸ்டார்ட் பண்ணா ஹாப்  கிளட்ச் புடிச்சு ஸ்டார்ட் பண்ண  முடியல.
 உடனே நான் டென்சன் ஆவாரத  பாத்துட்டு  பொறுமையா ஸ்டார்ட் பண்ணுங்க "அப்டினாரு. ஸ்டார்ட்  பண்ணிட்டேன் .  கியர் ஒன் அப்டினாரு  போட்டுட்டேன் . அப்பறோம் டூ  த்ரீ  போட சொன்னாரு  போட்டு ஸ்டாப்  பண்ண சொன்னாரு . பண்ணியாச்சு.  ஹய்யா நான் பாஸ் ஆயிட்டேன்.

டெஸ்டு க்ரவுண்டுல  இருந்து  திரும்ப ஆர்.டி .ஓ  ஆபீஸ்  போற வழியில  அந்த சூர்யா டிரைவிங் ஸ்கூல்  ட்ரைனர்  சொன்னாரு, " மேடம்  கேட்டீங்களே ஒரு கேள்வி , ஆர்.டி .ஓ ஆபிசர் கிட்டயே   ஹாண்ட்  பிரேக் எப்படி எடுக்குறதுன்னு ? நான்  மெரண்டுட்டேன்  போங்க",  அப்டினு  சொன்னாரு  ".  ஆனா அவர் சொன்னதுக்கப்றம்தான் தோணிச்சு. நாமளும் கொஞ்சம் ஓவரா  போயிட்டோமோ ? சரி என்ன பண்றது . கேட்டாச்சு . ஒட்டியாச்சு .லைசன்ஸும்  வாங்கியாச்சு . இப்போ யோசிக்கிறதுல்ல பிரயோஜனம்  இல்ல.

கோய்ன்ஸிடென்ட்டலா  யு டியூப்ல  இந்த  விடீயோவை நான் பாத்தேன். இந்த கல்யாணம்  கண்டிஷன்ஸ் அப்ளை அப்டிங்குற  சீரீஸ்  எனக்கும் எம் பொண்ணுக்கும் ரொம்ப புடிக்கும்.  உங்களுக்கும்   புடிச்சா  பாருங்க
 https://www.youtube.com/watch?v=i2AWgeqSuy4.

படித்தமைக்கு  நன்றி . மீண்டும் சிந்திப்போம் .