ஓப்பநிங்
படு பயங்கரமா இருந்தாலும் பினிஷிங் எப்பவுமே நமக்கு
கொஞ்சம் கஷ்டம். இந்த மாதிரி பைல் க்ரியேட்
பண்ணி சேவ் பண்ணி
வச்சா ஒரு லாபம். லாபம்
நமக்கு இல்ல நம்ம வீட்ல
இருக்குறவங்களுக்கு. பெருசா என்னென்னமோ ப்ளான்
மட்டும் பண்றது ஆனா ஒண்ணுத்துக்கும்
பிரோஜனம் இல்ல அப்டின்னு அவங்க
பேசுறதுக்கு நாமளே ஒரு வழிய தரோம்ல
அத சொன்னேன். ஆனா
அதுக்கெல்லாம் பெருசா எப்பவும் பீல்
பண்றதே இல்ல. எவ்ளோ சொன்னாலும் பீல் பண்ண மாட்டேங்குறோமே
அப்டினு அவங்கள
பீல் பண்ண வச்சாத்தான் நமக்கு
அன்னிக்கு தூக்கம் வரும். நேரா விஷயத்துக்கு வேறேன்னு
சொல்லிட்டு இன்னும் நீ எங்கள
சுத்தல்ல விட்ரமானு நீங்க
யோசிக்கறது எனக்கு புரியுது. அதனால
நேரா நான் இப்போதைக்கு விஷயத்துக்கு
வரேன்.
ஜூன் -ஜூலை என்னோட
ப்ளான், வீட்டு வேலை அனைத்தையும் செய்வது. துணி துவைத்தல், வீட்டை மாப் கொண்டு துடைக்காமல் துணியால் துடைத்தல்
மேலும் ஒன் அவர் வாகிங் செய்தல் அப்டின்னு ஒரு பிரம்மாண்டமான ப்ளான் போட்டேன். பெருசா
ஒன்னும் ரிசல்ட் இல்லாததால செல்வா இது வேலைக்கு ஆவாது நீ ஒரு ஜிம்ல சேருன்னாரு. எங்க அபாட்மேன்ட்லயே ஒரு
ஜிம் இருக்கு, அதுக்கு பஸ்டு போறேன்னு சொன்னேன்.
செல்வா அதெல்லாம் வேலைக்கு ஆவது நீ கண்டிப்பா
ரெகுலரா போமாட்ட அப்டின்னு சொன்னாரு. நாம கேப்போமா? இல்ல அதெல்லாம் நான் போவேன்னு அடம்புடுச்சேன். ஒரு
நாள் ட்ரேட் மில்ல ஒரேடியா ஓடறது அப்றோம் ஒரு நாள் போறது இல்ல. இதனால மசில் ஸ்ட்ரெயின்
ஆயுடுச்சு. டாக்டர் கொஞ்ச நாளைக்கு ஏதும் பண்ண வேணாம் அப்டின்னு சொல்லிட்டாரு . நான் ரொம்ப நாள் ஏதும்
பண்ணமா விட்டுட்டேன். அப்றோம் நெறைய வேலைகள் வந்துருச்சு. சோ ஆகஸ்ட் - ஜனவரி ல எந்த
எபர்ட்டும் போடல. இது சரியா வராதுன்னு செல்வாவே எங்க ஏரியால ஒரு ஜிம்ம
கண்டுபுடுச்சு சேத்து விட்டாரு. நானும் கொஞ்ச
நாள் ரெகுலரா போயிட்டு இருந்தேன். நம்ம எத
ஆராம்பிச்சாலும் ஏதாது ஒரு தடங்கள் வரது சகஜம். குடும்ப பொறுப்புகள் காரணமா ஜிம்முக்கும்
ரெகுலரா போக முடியல. ஆனா எப்டியோ மூணு மாசம் போயிட்டேன் . அப்றோம் வேல தேடுற டென்ஷன்.
மார்ச்லதான் காலேஜுக்கு அப்பலை பண்ணனும். சப்பா..... படிக்குறத விட கஷ்டம்
படிச்ச படிப்புக்கு ஒரு வேலைய தேடுறது. இந்த
மூணு மாசம் ஜிம் போனதுல பெருசா ஒன்னும் எடை குறையல . ஏன்னா நாமதான் ரெகுலரா போகவே இல்லையே.
இதுக்கு நடுவுல ஜி.எம் டயட் பண்ணுங்க அப்டின்னு
பிரண்ட்ஸ் சொன்னாங்க. அது ஏழு நாள் டயட். அஞ்சாவது நாள் செல்வா பாட்டி இறந்துட்டாங்க. அதனால அதையும்
கம்ப்ளீட் பண்ண முடியல. அப்றோம் எங்க அபார்ட்மெண்ட் நண்பர்கள் மூணு பேர் சேர்ந்து யோகா
பண்ண ஆம்பிச்சோம் . அதுவும் ரெகுலரா பண்ண முடியல.இப்டியே நாள கடத்தியாச்சு. இப்போ வேலையும் கெடச்சாச்சு. இனிமே
எங்க. எதாச்சும் உருப்பிடியான ப்ளான் பண்ண
வேண்டியதான். பாப்போம்.
ஆனா எனக்கு என்ன
தோணுதுன்னா ஒரு விஷயம் பண்ணும்னு உண்மையாவே
அக்கறை இருந்தா என்ன எடஞ்சல் வந்தாலும் நாம பண்ணுவோம். அந்த அக்கறைதான் மிஸ் ஆயுடுச்சு. அந்த அக்கறைய மட்டும் இந்த விஷயத்துல உருவாக்கிகனும்னு நெனைக்குறேன். கரெக்டுதான? படித்தமைக்கு மிக்க நன்றி. சந்திப்போம்.
No comments:
Post a Comment