இது என்ன
டிசைன்னு புரியல. இல்ல ட்ரஸ் டிசைன் இல்ல :) வாழ்க்கையோட டிசைனை சொன்னேன் .
2015 வெள்ளம் வந்த
சமயத்துல வீட்டுக்குள்ள இருந்தப்போ நெலம வேற. வெளிய போகமுடியாம இருந்துச்சு. இப்போ
எல்லாம் முடியும் ஆனா போக பயமா இருக்கு . எனக்கென்னமோ கொரோனவால பாதிக்கப்பட்டவங்கள விட இந்த சூழ்நிலையை சரியா கையாளாதவங்க தான் அதிகமா
இருப்போம்னு நினைக்குறேன். என்னையும் சேத்துதான் சொல்றேன். வீட்லயே எப்பவுமே
இருக்கும் இல்லத்தரசிகள் , ரிட்டயர்ட்
ஆன முதியோர் இவங்களுக்கு பெருசா ஏதும்
தோணாது ஏன்னா ஆல்ரெடி அவங்க இத
ஹாண்டில் பண்ணிட்டாங்க . வெளிய நாலு பேரோட
பேசி பழகுனவங்களுக்கு நிச்சயமா கஷ்டமா இருக்கும் . எடுத்துக்காட்டுக்கு
என்னைய எடுத்துக்கிட்டா ஒரு நாளைக்கு
கொறஞ்சது 50 பேர்ட்டயாது
பேசுவேன் . 50 பேரும்
நெருக்கமானவங்க இல்லனாலும் தொழில் ரீதியா மாணவர்கள் ஆசிரியர்கள் கிட்ட
பேசும்போது நம்ம கொஞ்சம் டைவர்ட் ஆவோம் .
வீட்டுக்கு வரும்போது மாறுபட்ட சூழ்நிலையை
பாக்ரதால கொஞ்சம் லைப் வேற மாதிரி
இருந்துச்சு . வீட்ல குடும்பத்தோட இருக்கிறது மகிழ்ச்சியான விஷயமானாலும் சில
சமயங்கள்ல குழந்தைகளை விளையாட விடாம
இருக்கோமா . அவங்ககிட்ட இருந்து நமக்கு வர பிரஷர்ல நம்ம தடுமாற்றங்களை சந்திக்க
வேண்டி இருக்கு. நேத்து தான் நானும் என்
பொண்ணும் டைம் டேபிள் போட்டு ஆக்ட்டிவிட்டி செய்யலாம்னு முடிவு பண்ணோம் .செல்வா ஒர்க் பிரேம் ஹோம் . நானும்
மாணவர்களுக்கு வீடியோ மூலம்
சொல்லித்தறணும் . ஆனா குழந்தைகளால அப்பா அம்மா ரெண்டு பேரும் வீட்ல எப்பயும் வேல பாக்றதா ஏத்துக்க முடியல .
என் பொண்ணு கூட இருக்கும்போது லேப்டாப் கைல வச்சுக்க மாட்டேன் . மொபைல் கூட அவ வேற
வேலைல பிசியா இருந்தாதான் என்ன யூஸ் பண்ண
விடுவா . இல்லனா அவ பக்கத்தில எப்பவும் நான் இருக்கணும் . சொன்னா புரிஞ்சிப்பா . ஆனா சில நேரங்கள்ல மக்கர் பண்ணுவா .
இதெல்லாம் நான்
சரி பண்ண நான் சரியா இருக்கணும்ல . எப்பவாச்சும் கோவம் வர எனக்கு நேத்து பழைய படி
ரொம்ப கோவம் வந்துருச்சு . அப்பத்தான் யோசிச்சேன் . நாம இந்த சூழ்நிலையை
சரியா கையாளணும்னு .எனக்கு புடுச்ச
விஷயத்தை நான் பண்ணாலே சீக்கிரமா
சரியாயிடுவேன் . நீங்களும் என்ன
பன்னலாம்னு யோசிங்க. எனக்கு புடுச்ச விஷயங்கள்ல ஒண்ணு எழுதறது .
ரொம்ப நாளா பாட்டர்ன் பேஸ்ட் கவிதை எழுதணும்னு யோசிச்சேன் . கவிதைங்கறது
பெரிய வார்த்தையா இருக்கும் . கொஞ்ச மாதங்கள் முன்ன இன்கிரீசிங் வார்ட் ஆர்டார்ல எழுதினேன் . அதாவது முதல் வரில ஒரு வார்த்தை . இரண்டாம் வரில ரெண்டு வார்த்தை அப்டி. 10 வரி வரைக்கும் ட்ரை பண்ணேன்.
https://subalalithaintamil.blogspot.com/2019/07/blog-post.html
அதே மாறி வேற பேட்டன்ல யோசிப்போம்னு தோணிச்சு . அதான் இந்த பதிவு . சப்பாடா !!!! ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லிட்டேன். இந்த கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்றது நாக்கு தள்ளுது :)
https://subalalithaintamil.blogspot.com/2019/07/blog-post.html
அதே மாறி வேற பேட்டன்ல யோசிப்போம்னு தோணிச்சு . அதான் இந்த பதிவு . சப்பாடா !!!! ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லிட்டேன். இந்த கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்றது நாக்கு தள்ளுது :)
அந்த பேட்டன் இது தான் .
இந்த பே ட்டேன்ல இந்த கவிதையை பிட்
பண்ண ட்ரை பண்ணேன் . முடிஞ்சா படிங்க :) டைப் பண்ண ட்ரை பண்ணேன் முடியல .
சோ எழுதி போட்டோ எடுத்தேன் . கையெழுத்து மற்றும் எழுத்து பிழைகளை மன்னிக்கவும் :) போட்டோவை க்ளிக் பண்ணி படிங்க :)
படித்தமைக்கு நன்றி :)
சுபலலிதா
4 comments:
நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்...
தொடர வாழ்துகள்...
படித்தமைக்கும் தங்களின் உற்சாகமளிக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி :)
அருமை அருமை
Romba nandri karthi :) by the way Kavitha purinjicha enna ? 😂
Post a Comment